அம்மாவும் சும்மாவும் !
அம்மா என்றால் மன்னிப்பாள்
சும்மா என்றால் தண்டிப்பாள் !
அம்மா பாதம் சுவனம் வாழும் !
சும்மா என்றால் நரகம் வாழும் !
அம்மா கண்களில் கனிவு சுரக்கும் !
சும்மா என்றால் கோபம் பிறக்கும் !
அம்மா என்றால் கருணைக் கடலாம் !
சும்மா என்றால் பழிக்குப் பழியாம் !
அம்மா என்பவள் வீட்டில் மட்டும் !
சும்மா என்றால் வெளியில் தெருவில் !
அம்மா அன்பின் அமுத சுரபி !
சும்மா என்றால் விஷநீர் அருவி !
அம்மா பிள்ளையின் பள்ளிக்கூடம் !
சும்மா என்றால் கள்ளிக்கூடம் !
அம்மா உயிரின் மெழுகுவத்தி !
சும்மா என்றால் ஊதுவத்தி !
அம்மா என்பவள் கருவறை ஆனால்
சும்மா என்பவள் கல்லறை ஆவாள் !
அம்மா வெளிச்சத் தின்விதைஆவாள் !
சும்மா என்றால் இருள்விதை ஆவாள் !
அம்மா இறைவனின் அருள்நிழல் ஆவாள் !
சும்மா என்பவள் சாத்தான் ஆவாள் !
அம்மா ஆண்டால் அகிலம் சிறக்கும் !
சும்மா ஆண்டால் கலகம் பிறக்கும் !
From:
MUSTAFA KAMAL <pmkamal28@yahoo.com>