அம்மாவும் சும்மாவும் !

Vinkmag ad

அம்மா என்றால் மன்னிப்பாள்

சும்மா என்றால் தண்டிப்பாள் !
அம்மா பாதம் சுவனம் வாழும் !
சும்மா என்றால் நரகம் வாழும் !
அம்மா கண்களில் கனிவு சுரக்கும் !
சும்மா என்றால் கோபம் பிறக்கும் !
அம்மா என்றால் கருணைக் கடலாம் !
சும்மா என்றால் பழிக்குப் பழியாம் !
அம்மா என்பவள் வீட்டில் மட்டும் !
சும்மா என்றால் வெளியில் தெருவில் !
அம்மா அன்பின் அமுத சுரபி !
சும்மா என்றால் விஷநீர் அருவி !
அம்மா பிள்ளையின் பள்ளிக்கூடம் !
சும்மா என்றால் கள்ளிக்கூடம் !
அம்மா உயிரின் மெழுகுவத்தி !
சும்மா என்றால் ஊதுவத்தி !
அம்மா என்பவள் கருவறை ஆனால்
சும்மா என்பவள் கல்லறை ஆவாள் !
அம்மா வெளிச்சத்  தின்விதைஆவாள் !
சும்மா என்றால் இருள்விதை ஆவாள் !
அம்மா இறைவனின் அருள்நிழல் ஆவாள் !
சும்மா என்பவள் சாத்தான் ஆவாள் !
அம்மா ஆண்டால்  அகிலம் சிறக்கும் !
சும்மா ஆண்டால்  கலகம் பிறக்கும் !
From:
MUSTAFA KAMAL <pmkamal28@yahoo.com>

News

Read Previous

ஏன் அவர்கள் மவுனமாக இருந்தார்கள் ?

Read Next

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரதத் திரு நாடு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *