அன்பிற்குமுண்டோ அடைக்குந் தாழ்..

Vinkmag ad

அன்பிற்குமுண்டோ அடைக்குந் தாழ்.. (கவிதை) வித்யாசாகர்!

 

1
னக்கு நானென்றால்
எத்தனைப் பிடிக்குமோ தெரியாது,

எனக்கு நீயென்றால்
அதை எப்படிச்சொல்ல..

இதோ இந்த வானத்தைப்
பார்.,
அதோ எங்குமாய் நீண்டு விரிந்த
கடலைப்பார்.,
முடிந்தாலந்த நீலவானின் நட்சத்திரங்களை
மொத்தமாய் எண்ணிச் சொல்;

முடியாவிட்டால் நம்பிக்கொள்
அவைகளையெல்லாம்விட அதிகமானது
உன் மேலான எனதன்பு..

————————————————————


2
னக்கும்
எனக்கும்
தூரம் மனசளவுதான்;

உனக்குப் பிடித்த
எனக்குப் பிடித்த நம் மனசளவு!

உனக்கும்
எனக்கும்
அழகு ஒன்றுதான்;

உனை விரும்பும்
எனை விரும்பும்
நம் அன்பொன்றுதான் அழகு!

உனக்கும்
எனக்கும்
உயிர் ஒன்று தான்;

உனக்குள் துடிக்கும்
எனக்குள் துடிக்கும்
இந்தக் காற்றைப்போல நம்
உயிருமது ஒன்றுதான்..
————————————————————

3
வி
டிகாலை வெளிச்சத்தில்
கத்தும் சிட்டுக் குருவியைப் போலத்தான் நானும்;

உனது சின்ன சிரிப்பைக்
கண்டாலும் எனக்கு
விடிந்துவிட்டதாய் எண்ணிக்கொள்கிறேன்..
————————————————————

4
ங்கோ தூரத்தில் கேட்கும்
சிட்டுக்குருவியின் சப்தமும்,
எங்கோ தூரத்தில் கேட்கும்
சாவுமேளத்தின் சப்தத்தையும் போலத்தான் நீயும்

எங்கோ எனக்குள்ளே
ஒலித்துக்கொண்டே இருக்கிறாய்,

எனக்குள் நானாய்
நீயே உயிர்த்திருக்கிறாய்!!
————————————————————

5

நீ வந்து நிற்பதை
தினமும் காண்கிறேன்,
தெருமுனை சென்று
திரும்பிப் பார்க்கிறாய்
காண்கிறேன்,
வெகுநேரம் காத்திருக்கிறாய்
காண்கிறேன்,
எதையோ எண்ணி உருகுகிறாய் காண்கிறேன்;
நீ செய்யும் எதையும்
எனக்காகவே செய்வதாக யெண்ணி
சுவாசிக்கிறது என் இதயம்..

ஒருவேளை
அந்தக் காத்திருப்பும்
தவிப்பும் எனக்கானதல்ல என்றறிவேனெனில் அதன்பின்
அந்த இதயம் சுவாசிக்குமா தெரியவில்லை..

————————————————————

வித்யாசாகர்

 

News

Read Previous

ஸிரனோ கற்பனை செய்ததுபோல் பயணம் சாத்தியமா?

Read Next

நீயந்த நிலவிற்கும் மேல்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *