அந்தக் கிண்ணங்களை நிரப்பட்டும்

Vinkmag ad
அந்தக் கிண்ணங்களை நிரப்பட்டும்.
====================================================ருத்ரா
பலிபீடமும் வெட்டரிவாளும் தான்
கடவுள் உட்கார்ந்திருக்கும் இடமா?
ஏழை பக்தனின் நோஞ்சான் ஆடுகளின்
பலியிலா
கர்த்தருக்கு ஜீவனம்?
தண்டனைகள் மூலம் தான்
கர்த்தர் புஜபலம் காட்டவேண்டுமா?
“மாற்றி யோசி”
கர்த்தரின் கர்த்தர்
கர்த்தருக்கு கட்டளையிட்டார்.
புதிதாய் வந்து சிசுவாய்
சிரிக்கின்றான் மாட்டுக்க்கொட்டிலில்.
பனித்துளிகள் முத்தம் கொடுக்க‌
அன்பின் அமைதியின் மன்னிக்கும் மானிடத்தின்
புதிய ஏற்பாடு
பக்கங்களை புரட்டத்துவங்கியது.
மனித ரத்தத்துள்
மகத்தான சத்தமா?
விடுங்கள்
எல்லா கொலைகளையும்.
விடமுடியவில்லைதான்
ப்ளேட்டில் சூடான இறைச்சி
வாழ்க்கையின் அர்த்தத்தை பலமாக‌
கூவுகிறது.
இருந்தாலும் சாந்தாகிளாஸ்
பரிசுகள் தருகிறார்.
இதயங்களை கிண்ணங்கள் ஆக்குங்கள்.
சமாதானத்திராட்சையின் ரசங்கள்
அந்தக் கிண்ணங்களை நிரப்பட்டும்.
“மெர்ரி க்ருஸ்த்மஸ்”

News

Read Previous

கவலை

Read Next

மூளையை வளமாக்கும் தயிர்சாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *