அந்தக் கண்கள்

Vinkmag ad

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்

thahiruae@gmail.com

தோஹா – கத்தார்

 

(நாளை எனது அன்னையாருக்கு கண் அறுவை சிகிச்சை நடை பெற இருக்கிறது .

நல்ல தெளிவான கூரிய பார்வை கிடைக்க அவருக்கு துஆ – செய்யுங்கள் )

 

  • என்னை சுமையாக

அல்ல

அவர் பார்த்துகொண்டது

அவரது

கண் இமையாக !

 

  • அந்தக் கண்கள்

இப்போது பார்வை கொஞ்சம் மங்கலாய்

தெரிகிறது !

அதை அறிந்த  நாட்களில் இருந்து

எனக்கு நெஞ்சத்தில்

கவலையாய் வருகிறது !

 

  • இரவுகளில் ஆழ்ந்த உறக்கத்தில்

என் கண்கள் இருந்த பொது

அவரது கண்கள் இரக்கத்தோடு

எனக்காக விழித்திருந்தது !

 

  • பள்ளிக்குப்  போய் விட்டு

நான் வீட்டுக்கு வரும் நேரம்

வாசலில் எதிர்ப் பார்த்து

ஆவலோடு அவரது கண்கள் காத்திருந்தது !

 

  • காணாமல் நான் போன போதும்

என் கால் ஊனமாய் ஆன  போதும்

அந்தக் கண்கள்தான்  கண்ணீரை சொரிந்தது !

 

  • துன்பங்கள் என்னை ,

துரத்திய தருணங்களில்

அன்பான அந்தக் கண்கள்

கருணையை சொரிந்தது

 

  • சாப்பிடும் நேரம்

சரியாக சாப்பிடுகிறேனா என்று

கவனமாய்

அந்தக் கண்கள்தான் பார்த்துக் கொண்டது !

 

  • படிக்கும் நேரம்

பக்கத்தில் அமர்ந்து

பரிவாய்

அந்தக் கண்கள்தான் பார்த்துகொண்டது !!

 

  • ஆம் அவை

என் அன்னையின் கண்கள் !

 

(ஏதாவது கண் படம் இந்தக் கவிதைக்கு போடலாம் என நினைத்தேன் .

எனினும் அவை எதுவும் என் அன்னையின் கண்ணாக இல்லாததால் போடாமல் தவிர்த்தேன். நிஜமான அந்தக் கண்களுக்கு நிழற்படத்தில் கற்பனையாக எந்தக் கண்களும் போட விரும்பவில்லை  )

News

Read Previous

மறுமை வாழ்வை நேசிப்போம்!

Read Next

​உயிலும் உடலும் (மரண சாசனம்)

Leave a Reply

Your email address will not be published.