அண்ணல் நபியே ! ஆருயிரே !
அண்ணல் நபியே ! ஆருயிரே !
(. (14-10-2020)
—————————————
அகிலத்தின் அருட்கொடையாய்
அரபுலகில் வந்துதித்த
அண்ணலே ஆருயிரே
ஆளுமையின் இலக்கணமே
கண்ணின் மணியே நாயகமே !
கல்பின் ஒளியே நாயகமே !
கருணையின் வடிவே நாயகமே !
காத்தமுன் நபியே நாயகமே !
விண்ணில் உதித்த தண்மதியே !
விடியலைத் தரும் கதிர் ஒளியே !
மதினத்தில் வாழும் மாநபியே !
மக்கள் மனதில் நிறைந்தவரே !
கல்லடி பட்டும் கலங்காமல்
சொல்லடி பட்டும் துவளாமல்
இரக்கம் கொண்ட இதயத்தால்
இடற்கள் களைந்த நாயகமே
மண்ணும் விண்ணும் போற்றுகின்ற
மாமறையைத் தந்த மன்னவரே
மாற்றார் மீதும் கருணை கொண்டு
மண்ணில் அன்பை விளைத்தவரே
வல்லோனும் வானவரும்
வாழ்த்துச் சொல்லும் வள்ளலே
வான்மறை போற்றும் நாயகமே
வாழும் உம் புகழ் என்றென்றுமே
கவின்முகில் மு முகமது யூசுப் உடன்குடி