அகில உலக நட்பு நாள் வாழ்த்துக்கள்
அகில உலக நட்பு நாள் வாழ்த்துக்கள்
சாதி , இனம் சாராது
மதம்,மொழி பாராது
நாடு , நிறம் நாடாது
கல்வி நிலை காணாது
செல்வநிலை தேடாது
பாலினமும் பாராது
ஊனங்களை உணராது
குற்றங்குறை கூறாது
எத்தனை இடர் வரினும்
எள்ளளவும் மாறாது
சொத்து சுகம் இழந்தாலும்
சொந்த பந்தம் இகழ்ந்தாலும்
தத்தளிக்கும் சூழ்நிலையில்
தனது நிலை பாராது
உள்ளமொன்றிப் பழகிடும்
உன்னத நிலையிது
கள்ளமின்றிப் பழகிடும்
அற்புத உறவிது
இவ்வுறவுக் கெவ்வுறவும்
ஈடு இணை இல்லையே
இவ்வுறவுக் கென்றேன்றும்
வானம்தான் எல்லையே .
நட்புடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
சிகாகோவிலிருந்து – 03.08.2014.
rajam sethu <rajamsethu@gmail.com>
பெரியார் ஆண்டு 135 தொ. ஆ. 2879 தி. ஆ. 2045
கடகம் ( ஆடி ) 18 03–08–2014மதிப்பு மிகு சிலேடைச் சித்தர் அவர்களுக்கு வணக்கம் .
” புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.”
என்ற வள்ளுவத்தின் வழித்தடத்தில் வாழ்ந்த பேரரசன்
கோப்பெருஞ்சோழன் –பெரும்புலவர் பிசிராந்தையார்
நட்பின் பொற்பினை மனதில் இருத்திடச் செய்யும் வகையில்
ஒல்லையிலும் மனம் கோணாது தொல்லை நீக்கும்
உண்மை நட்பிற்கு எல்லையில்லை என்பதை இப்பெரும்
உலகின் நட்பு நாளில் வாழ்த்திய தங்களுக்கு நன்றியும்
வாழ்த்தும்.! –நட்புணர்வுடன் இளையவன் -செயா, மதுரை .
கடகம் ( ஆடி ) 18 03–08–2014மதிப்பு மிகு சிலேடைச் சித்தர் அவர்களுக்கு வணக்கம் .
” புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.”
என்ற வள்ளுவத்தின் வழித்தடத்தில் வாழ்ந்த பேரரசன்
கோப்பெருஞ்சோழன் –பெரும்புலவர் பிசிராந்தையார்
நட்பின் பொற்பினை மனதில் இருத்திடச் செய்யும் வகையில்
ஒல்லையிலும் மனம் கோணாது தொல்லை நீக்கும்
உண்மை நட்பிற்கு எல்லையில்லை என்பதை இப்பெரும்
உலகின் நட்பு நாளில் வாழ்த்திய தங்களுக்கு நன்றியும்
வாழ்த்தும்.! –நட்புணர்வுடன் இளையவன் -செயா, மதுரை .
ilayavanjeya@gmail.com