கடாலாடிக் கரை சேர்ந்து துறை கண்ட தமிழர் வாழ்வும் மொழியும்
கடாலாடிக் கரை சேர்ந்து துறை கண்ட தமிழர் வாழ்வும் மொழியும்.
பட்டினம் என்பது என்ன ?
பட்டினம் என்பது நம் தமிழில் கடல் சார்ந்த இடங்களையே பெரிதும் குறிக்கும். நாகைப்பட்டினம், விசாகப்பட்டி
“கெட்டும் பட்டினம் சேர்” என்ற பழய பழ மொழி வந்தது எதனால்? பட்டினப்பாலையில் துறைமுகம் சார்ந்த தொழில்களும் வேலைவாய்ப்புகளும் மிக அதிகம். அது நம் தமிழர் பறந்து விரிந்த உலகத்தாருடன் கொண்ட கடல் வாணிபத்தொடர்பின் வழி வந்த முது மொழி தான் “கெட்டும் பட்டினம் சேர் ” என்பது.
துறையும் கரையும் என்ன ?
துறை என்பது நீர் நிலைக்கும் நிலத்திற்கும் இடைப்பட்ட, ஆனால் கரை என்று சொல்ல முடியாத, திருத்தமாகவும், செப்
இதனால்தான் கோவில்களில் உள்ள திருக் குளத்தில் படிக்கட்டுகளை – படித்துறை என்று அழைக்கின்றனர். அதாவது நிலைப்பட்ட நீர் நிலையினில் இறங்கி நீராடிவிட்டு திடமான படிக் கட்டுகளில் ஏறி வரும் பொழுது அதனைப் படித்துறை என்பது வழக்கு. கோவில்களுக்கு படித்துறை செய்து வைத்தவர்கள் தங்கள் பெயரையும் படித்துறை அமைத்த காரணத்தையும் கல்வெட்டுக்கள் இன்றும் சான்று கூறுகின்றன.
மயிலாடுதுறை, திருவாவடுதுறை,
சைவ சமயத்தில் பல அடியார்கள் மயிலாடுதுறை, திருவாவடுதுறை என்று துறை தேடிச்சென்றனர், துறை தெரியாமல் சென்றவர்தான் திருநாவுக்கரசர். அதாவது அவர் விரும்பிச்சென்றது கயிலை.