‘வாழ்க்கையை எந்தக் கோணத்தில்”..

Vinkmag ad

“இன்றைய சிந்தனை.”.( 19.02.2020)
…………………………

‘வாழ்க்கையை எந்தக் கோணத்தில்”..
…………………………

இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு
கோணத்தில் பார்க்கின்றனர். உண்மை தெரியாமல் பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது.

நட்பும், சகோதரத்துவமும் நிலைக்கவேண்டுமானால் பிறரின் தவறுகளை மனதிலிருந்து அழித்துவிட வேண்டும்..

அவர்கள் தெரிந்தோ,தெரியாமலோ செய்த தவறுக்காக நட்பையோ, சகோதரத்துவத்தையோ அழித்து விடாக்கூடாது…
.
ஒருவரால் துன்பத்தை சந்திக்க நேர்ந்தால்,அதைவிட பலமாக அதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்என்று ஒரு போதும் எண்ணக் கூடாது..

சிறிது சிந்தித்து, நலினமாக அதை கையாள வேண்டும்.

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய் விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்…!” என
எழுதினான்.

கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன் பிடித்துகொண்டு இருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வளையில் சிக்கின.

அவர் அக்கடற் கரையில்,“இக்கடல் பெரும் கொடையாளியப்பா…!” என எழுதி விட்டார்.

அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கி விட்டான். மகன் மீது அதிக பாசமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே.. இது கொடுமையான கடல் என கரையில் எழுதினாள்.

ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச்
சென்று முத்துக்களை வேட்டையாடிக் கொண்டு வந்தார்.

அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க
மகிழ்ச்சியோடு இருக்கலாம்.. என எழுதினார்.

பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்து விட்டுச் சென்றது.

ஆம்.,நண்பர்களே..

வாழ்க்கையை நாம் எந்தக் கோணத்தில் பார்க்கிறோமோ அந்தக் கோணத்தில் அது நமக்குத் தெரிகிறது.

வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கின்றோமோ அதுதான் நமக்குக் கிடைக்கின்றது.

வாழ்க்கையைப் பற்றி மனிதர்களின் கண்ணோட்டமும், வாழ்க்கையை அவர்கள் அணுகும் முறையும் வேறுபட்டு இருப்பதால்தான் ஒரே உலகம் ஒவ்வொரு மனிதனையும் வெவ்வேறு விதமாகப் பார்க்க வைக்கிறது…..(ஆக்கம்.உடுமலை.சு.தண்டபாணி…..)

News

Read Previous

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

Read Next

நூல் விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *