மதிக்கப்பட வேண்டியவன்
1.மதிக்கப்பட வேண்டியவன்.—தாயை வணங்குபவன்..
2.வெறுக்கப்படவேண்டியவன்.—செல்
3.வேதங்களின் பிறப்பிடம்.—ஓம் எனும் பிரவணம்.
4.தெய்வம் என்பது எது?.—நம்முடைய நல்ல செயல்கள்.
5.முன்னேற உதவுவது.—நல்லவைகளில் நம்பிக்கை.
6.முன்னேற முடியாமல் தடுப்பது….கர்வம்.
7.எது புண்ணியதீர்த்தம்?.—மனத்தின் அழுக்கைப் போக்குவது.
8.எது கவுரவம்.?–.யாசிக்காமல் இருத்தல்.
9.உலகில் மிகவும் கடினமான் காரியம்.—மனதை அடக்குவது.
10.மிகவும் சுலபமானது எது?—மனதை அதன் போக்கில் விட்டு விடுவது.
11.மோட்சம் அடைய உதவுது எது?—ஜீவன் எனும் பறவை மோட்சத்தையடைய ஞான்ம், வைராக்யம் என்ற சிறகுகள் உதவுகின்றன.
12.துயரம் எது?—எதிலும் திருப்தியின்மை..
13.சொர்க்கம் எது?—சான்றோரின் நட்பு.
14.நரகம் எது?—அடிமை வாழ்க்கை..
15.நிலையற்றது எது?—கனவு போல் மறைந்த இளமை.
16.நிலையானது எது?—தானத்தால் வந்த புகழ்.
17.குருடன் யார்?—அன்பின் வழியை விட்டு ஆசை வ்ழி நடப்பவன்.
18.அச்சம் எது?-ரகசியமாக் செய்த பாவம்.