கவிஞர்களுக்கு ஓர் நற்செய்தி
கவிஞர்களுக்கு ஓர் நற்செய்தி
—————————— ————————
சிறந்த கவிதைத் தொகுப்புக்கான தேவதேவன் விருது மற்றும் பரிசுத் தொகை ரூ.20,000 காத்திருக்கிறது.
விதிமுறைகள்:
—————————
1) கவிதை நூல்கள் ஜனவரி 2020 முதல் டிசம்பர் 2020 வரை வெளியிடப்பட்டவையாக இருக்க வேண்டும்.
2) பரிசீலனைக்கு நூலின் 3 பிரதிகள் அனுப்பவேண்டும்.
3) முதல் பதிப்பு நூல் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
4) கடைசி தேதி 31.3.2021.
5) மூன்று பேர் கொண்ட நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
6) தேர்வு குறித்த வேறு எவ்விதமான பரிந்துரைகளையும் ஏற்கப்படமாட்டாது.
7) அச்சுப்புத்தகங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
8. நூலுடன் தனித்தாளில் ஆசிரியர் முகவரி, மின்னஞ்சல் மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய எண் ஆகியவற்றை இணைத்து அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Kayalvizhi S,
102, LIC Colony,
Kagithapatarai,
Vellore 632 012.
Cell: 98941 46518
ஏப்ரல் மாதம் துவக்க விழா காணும் கோட்டைத் தமிழ் முற்றத்தின் ஆரம்ப நிகழ்வில் விருதும் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.