தோழா

Vinkmag ad
அடா….  புடா….  வாடா….  போடா….
என்று கவிதை எழுதுபவர்கள் 
தோழா என்று மாற்றிக் கொண்டால் 
படிக்க இனிமையாக அருமையாக 
மதிப்புடன் இருக்குமே என் தோழா 
கேளாய் என் தோழா 
 
உழைப்பதிலா உழைப்பை
பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல்
என் தோழா

உழைப்பவரே உரிமை
பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல்
என் தோழா

கல்வி கற்றோம்
என்ற கர்வத்திலே இன்பம்
கண்டவர் உண்டோ சொல்
என் தோழா

கல்லாத பேரையெல்லாம்
கல்வி பயிலச் செய்து
காண்பதில் தான் இன்பம்
என் தோழா

இரப்போர்க்கு ஈதலிலும்
இரந்துண்டு வாழ்வதிலும்
இன்பம் உண்டாவதில்லை
என் தோழா

அரிய கைத் தொழில் செய்து
அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன் வாழ்வதின்பம்
என் தோழா

பட்டத்திலே பதவி
உயர்வதிலே இன்பம்
கிட்டுவதே இல்லை என் தோழா

உனை ஈன்ற தாய் நாடு
ஆ ஆ..
உனை ஈன்ற தாய் நாடு
உயர்வதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல்
என் தோழா
— கவி லக்ஷ்மணதாஸ்

News

Read Previous

பத்தமடை பாய்

Read Next

கவிஞர்களுக்கு ஓர் நற்செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *