உலக தண்ணீர் தினம்
உலக தண்ணீர் தினம் 22.3.2021
தண்ணீர் இன்றி பயிர்கள் இல்லை,
தண்ணீர் இன்றி உயிர்கள் இல்லை.
தண்ணீர் இன்றி சுத்தம் இல்லை,
தண்ணீர் இன்றி தொழில்கள் இல்லை, தண்ணீர் இன்றி வீடுகள் இல்லை,
தண்ணீர் இன்றி காடுகள் இல்லை,
தண்ணீர் இல்லையேல் பூமி தகிக்கும்,
தண்ணீர் இல்லையேல் உயிர்கள் தவிக்கும் ,
தண்ணீர்தான் நம் தாகம் தணிக்கும்,
நீரின்றி அமையாது உலகு என்றே தண்ணீர் பற்றி வள்ளுவர் உரைத்தார்.
கடலின் தண்ணீர் ஆவியாகி ,மழையாய்ப்பொழியுது மக்கள்மீது,
பெய்த மழைநீர் வீணாகாமல் சேமித்தாலே உலகம் செழிக்கும் , தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்பதை நமது மனதில் வைக்கணும் .
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம் .