முதுகுள‌த்தூரில் தொழிற்க‌ல்லூரி ஏற‌படுத்த‌ எம்.எல்.ஏ.விட‌ம் பொதுச்செய‌லாள‌ர் கோரிக்கை

Vinkmag ad

முதுகுள‌த்தூர் : முதுகுள‌த்தூர் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் முருக‌னை ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் பொதுச்செய‌லாள‌ர் ஏ. அஹ்ம‌து இம்தாதுல்லாஹ் 03.09.2011 ச‌னிக்கிழ‌மை காலை மரியாதை நிமித்த‌மாக‌ ச‌ந்தித்து அவ‌ருக்கு ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ ஜ‌மாஅத்தின் சார்பில் வாழ்த்துக்க‌ளைத் தெரிவித்துக் கொண்டார்.

அப்போது தாலுகா த‌லைந‌க‌ராக‌ விள‌ங்கும் முதுகுள‌த்தூரில் வேலைவாய்ப்பினை எளிதில் பெற‌க்கூடிய‌ வ‌கையில் தொழிற்க‌ல்லூரியினை அர‌சின் சார்பில் ஏற்ப‌டுத்த‌ முய‌ற்சி மேற்கொள்ள‌ வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் மேற்கொண்டு வ‌ரும் ம‌க்க‌ள் ந‌ல‌ப்ப‌ணிக‌ளுக்கு பாராட்டுக்க‌ளையும், வாழ்த்துக்க‌ளையும் தெரிவித்துக் கொண்டார்.

அத‌ற்கு ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் முருக‌னும் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெய‌லலிதா அவ‌ர்க‌ள் த‌மிழ‌க‌ வ‌ள‌ர்ச்சியில் மிகுந்த‌ ஆர்வ‌ம் கொண்டிருப்ப‌தாக‌வும், நிச்ச‌ய‌மாக‌ இக்கோரிக்கை முத‌ல்வ‌ரின் க‌வ‌ன‌த்திற்கு கொண்டு செல்ல‌ப்ப‌ட்டு நிறைவேற்ற‌ ஆவ‌ண‌ செய்ய‌ப்ப‌டும் என‌ உறுதிய‌ளித்தார்.

இச்ச‌ந்திப்பின் போது ப‌ள்ளிவாச‌ல் மேல்நிலைப்ப‌ள்ளி உத‌வித் த‌லைமையாசிரிய‌ரும், இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌ முத‌ல்வ‌ருமான‌ ஹெச். ஏ. முஹ‌ம்ம‌து சுல்தான் அலாவுதீன் உட‌னிருந்தார்.

News

Read Previous

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்!

Read Next

தமிழ் உணர்வு

Leave a Reply

Your email address will not be published.