துபாயில் முதுகுளத்தூர் சம்சுதீன் – அலாவுதீன் இல்ல திருமணம்

Vinkmag ad
mm3துபாயில் முதுகுளத்தூர் சம்சுதீன் – அலாவுதீன் இல்ல திருமணம்
டாக்டர் அமீர்ஜஹான் – மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர்
பி.கே.என். அப்துல் காதர் ஆலிம் தலைமையில் நடந்தது
துபாய் :
துபாய் மாநகரில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்
திடல் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் – அலாவுதீன் ஆகியோர்
இல்ல திருமணம் லேண்ட்மார்க் ஹோட்டலில் 13.03.2020 
வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடந்தது.
இந்த திருமண நிகழ்வுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
உறுப்பினரும், ஏ.ஜே. கல்வி அறக்கட்டளையின் தலைவருமான
டாக்டர் ஏ. அமீர்ஜஹான் தலைமை வகித்தார். அவர் திருமண
விழாவுக்கு வந்த விருந்தினர்களை வரவேற்று உரை நிகழ்த்தினார்.
சம்சுதீன் மற்றும் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துபாய் நீதிமன்றத்தில் இருந்து வந்திருந்த கத்தீப் தானி பின் சயீத் அல்ஃபலாஷி திருமண
நிகழ்ச்சியினை நடத்தினார். அவர் மணமக்கள் எஸ். அஸ்பக் அஹமது மற்றும்
ஏ.ராஷிதா பர்வீன் ஆகியோரது திருமணத்தை சாட்சிகள் முன்னிலையில்
நடத்தி வைத்தார்.
மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட தலைவர்
மவ்லானா பி.கே.என். அப்துல் காதர் ஆலிம் மணமக்களை
திருக்குர்ஆன்  வசனத்திலிருந்து விளக்கி கூறினார். மணமக்கள்
நீடூழி வாழ் வாழ்த்தினார்.
இந்த திருமண விழாவில் DBC & GCT குழுமத்தின் மேலான்மை இயக்குனர்  கீழக்கரை அமீர் பைசல்,  மற்றும் அக்குழுமத்தை சார்ந்த இயக்குனர்கள் அப்துல் வஹாப் ஷாரானி, S.K. சம்சுதீன், என்.எஸ். ஏ. நிஜாமுதீன் டாக்டர் நசீருல் அமீன், துபாய் ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர்
முதுவை ஹிதாயத், முதுகுளத்தூர் ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
mm

News

Read Previous

பெருவரமாய் பெண்ணன்றோ உருவாகி நிற்கின்றாள் !

Read Next

மகளிர் தினம்

Leave a Reply

Your email address will not be published.