நபிகளார் கேட்ட துஆவை நாமும் கேட்போம்!

Vinkmag ad

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதன் முதலாக நோன்பு பெருநாளை சந்தித்த நபிகள் நாயகம்(ஸல்).

பெருநாள் அன்று தான் இறைவனின் அருள் பொக்கிஷங்கள் அனைத்தும் திறந்து விடப்படுகின்றன.

இன்றைய நாளில் நபிகளார் கேட்ட துஆவை நாமும் கேட்போம்.

யா அல்லாஹ்!நாங்கள் உன்னிடம் உயர்ந்த வாழ்வையும் சிறந்த மரணத்தையும் கோருகிறோம்.மேலும் இழிவையும்,கேவலத்தையும் அடையாமல் நாங்கள் உன்னிடம் திரும்புவதை விரும்புகிறோம்.

யா அல்லாஹ்!எங்களுக்கு திடீர் மரணத்தை தந்து எங்களை அழித்து விடாதே.மரண உபதேசம் செய்ய முடியாமலோ,பிறரின் உரிமைகளை செலுத்த முடியாமலோ இருக்கும் நிலையில் எங்களை துரிதமாக பிரித்து விடாதே.

யா அல்லாஹ்!வாழ்வில் தூய்மையையும்,பிறரிடம் தேவைப்படாமையையும்,ஸ்திரத்தன்மையையும்,நேர் வழியையும்,இம்மை-மறுமைக்கான நன்மைகளையும் உன்னிடமே வேண்டுகிறோம்.

யா அல்லாஹ்!சந்தேகம்,மாறு செய்தல்,உன் மார்க்க காரியங்களில் முகஸ்துதியை விரும்புதல் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு தேடுகிறோம்.

உள்ளங்களை மாற்றக்கூடியவனே!நீ எங்களை நேர்வழியில் செலுத்திய பிறகு எங்கள் உள்ளங்களை கோணலாக்கி விடாதே.

எங்கள் மீது உனது ரஹ்மத்தை பொழிவாயாக.நிச்சயமாக நீயோ…பெரும் கொடை வள்ளலாக இருக்கிறாய்.என்று நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் விரும்பி கேட்ட துஆவை நாமும் கேட்டு நன்மை பெறுவோமாக.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி

News

Read Previous

தமிழின் சிறப்பு

Read Next

பனுவல் புத்தக விற்பனை நிலையம்

Leave a Reply

Your email address will not be published.