சிறந்த நூல்களுக்கான பரிசு: விண்ணப்பங்களை அனுப்ப ஆகஸ்ட் 30 கடைசி தேதி

Vinkmag ad
சிறந்த நூல்களுக்கான தமிழக அரசின் பரிசினைப் பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 30- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் வளர்ச்சித் துறையில் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்களுக்கான பரிசுப் போட்டி 33 வகைகளில் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு வகையிலும் ஒரு நூல் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரமும், அந்த நூலைப் பதிப்பித்த பதிப்பகத்துக்கு ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும்.
போட்டிக்குரிய நூல்களின் விண்ணப்பங்களை நிறைவு செய்து அனுப்புவதற்கான கடைசி நாள் ஜூலை 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 30-க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சிறந்த நூல் பரிசு வழங்கும் திட்டம் – விண்ணப்பப் படிவம்

தமிழ் வளர்ச்சித் துறை  சிறந்த நூல் பரிசு வழங்கும் திட்டம்

http://tamilvalarchithurai.org/a/schemes/6

விண்ணப்பப் படிவம்
சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் : 2012 -2013
1. நூலின் பெயர் :
2. பதிப்பிக்கப்பட்ட ஆண்டு :
3. நூலாசிரியர் பெயர் (புனைபெயர்
உள்பட) தமிழிலும் ஆங்கிலத்திலும்
4. முகவரி (தொலைபேசி எண்ணுடன்)  :
5. பதிப்பகத்தார் மற்றும் பதிப்பகத்தின்
பெயர் (தமிழிலும் ஆங்கிலத்திலும்)
6. முகவரி (தொலைபேசி எண்ணுடன்)  :
7. நூலாசிரியர் ஒப்பம் அல்லது இசைவு
:
8. பதிப்பகத்தார் ஒப்பம் அல்லது இசைவு
:
9. பரிசுப் போட்டியில் பங்கு பெறும்
நூலாசிரியரின் தன் விவரக் குறிப்பு
(தனித்தாளில் இணைக்கப்படுதல்
:
11. பதிவுக் கட்டணம் செலுத்திய விவரம்   :
உறுதி மொழி
இந்நூல் போட்டிக்குரிய ஆண்டில் வெளியிடப்பட்டது என்றும்,இத்தலைப்பில் / வகைப்பாட்டில்  ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினை இருமுறை பெற்றிருக்கவில்லை என்றும்,இதற்கு மைய / மாநில அரசிடமிருந்து நிதியுதவி /பரிசு எதுவும் பெறவில்லையென்றும், பாடநூலில் இந்த நூல் இடம் பெறவில்லை என்றும், இந்த நூலானது அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பிற சொற்பொழிவுகள் ஆகியவற்றிலிருந்து தொகுத்து வெளியிடப்படவில்லை என்றும், பல்கலைக் கழகங்களில்பட்டங்கள் பெறுவதற்கு இந்நூல் ஆய்வேடாக அளிக்கப்படவில்லை என்றும், நாளிதழ்களில் இது தொடராக வரவில்லை என்றும், வானொலி / தொலைக்காட்சிகளில் தொடராக ஒலி/ஒளிபரப்பு  ஆகவில்லையென்றும் உறுதி அளிக்கிறேன்.  மேலும், இப்பரிசுப் போட்டிக்குரிய விதிமுறைகள் அனைத்தையும் நன்கு அறிந்துள்ளேன் என்பதனையும் அவற்றிற்கு உட்படுகிறேன் என்றும், நான் அளித்துள்ள விவரங்கள் அனைத்தும்
உண்மையானவை என்றும் உறுதி அளிக்கிறேன்.
நூலாசிரியர் ஒப்பம்
    பதிப்பகத்தார் ஒப்பம்
சிறந்த நூல் பரிசுத்திட்ட விதி முறைகள்
1  பரிசுப் போட்டியில் பங்கு பெறுவோர் விண்ணப்பப் படிவத்தினை விடுபாடின்றி முழுமையாக நிறைவு செய்து அனுப்புதல் வேண்டும். முழுமையாக நிறைவு செய்யப்படாத விண்ணப்பம் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
2  ஒவ்வொரு நூலுக்கும் தனித்தனியாக விண்ணப்பம் அனுப்புதல் வேண்டும்.
3  போட்டிக்கு அனுப்பப்பெறும் நூல்கள் ஒவ்வொன்றிலும் 5 படிகள் அனுப்புதல்
4  பின்வரும் வகைப்பாடுகளில் போட்டிக்கு நூல்கள் பெறப்படும்.
1 மரபுக் கவிதை
2 புதுக் கவிதை
3 புதினம்
4 சிறுகதை
5 நாடகம் (உரைநடை, கவிதை)
6 சிறுவர் இலக்கியம்
7 திறனாய்வு
8 மொழி வரலாறு,
மொழியியல், மொழி
வளர்ச்சி, இலக்கணம்
9 பிற மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்
10 நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்)
11 அகராதி, கலைக்களஞ்சியம், கலைச்சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்
12 பயண இலக்கியம்
13 வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
14 நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வாணிகவழிகளும்,
அகழாய்வு
15 கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல்
16 பொறியியல், தொழில் நுட்பவியல்
17 மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல்
18 சட்டவியல், அரசியல்
19 பொருளியல், வாணிகவியல், மேலாண்மையியல்
20 மருந்தியல், உடலியல், நலவியல்
21 தமிழ் மருத்துவ நூல்கள்  (சித்தம், ஆயுர்வேதம்)
22 சமயம், ஆன்மிகம், அளவையியல்
23 கல்வியியல், உளவியல்
24 வேளாண்மையியல், கால்நடையியல்
25 சுற்றுப்புறவியல்
26 கணினி இயல்
27 நாட்டுப்புறவியல்
28 வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம்
29 இதழியல், தகவல் தொடர்பு
30 பிற சிறப்பு வெளியீடுகள்
31 விளையாட்டு
32 தமிழர் வாழ்வியல்
33 மகளிர் இலக்கியம்
5  பரிசுப் போட்டிக்குக் கருதப்படும் நூல்களின் முதல் பதிப்பானது
போட்டிக்குரிய ஆண்டில் சனவரி முதல் நாளிலிருந்து திசம்பர் 31க்குள்
(01.01.2012 – 31.12.2012) அச்சிடப்பட்டு வெளியிடப்பெற்றிருத்தல்
வேண்டும்.
6  நூலாசிரியர்/பதிப்பகத்தார்  ஒப்பம் அல்லது இசைவுக் கடிதத்துடன்
அனுப்பப்பெறும் விண்ணப்பங்கள் போட்டிக்குக் கருதப்பெறும்.
7  நூலாசிரியர் ஒப்பமோ இசைவோ இன்றி வரும் நூல்கள் பரிசுக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டால் பதிப்பகத்தாருக்கு மட்டுமே பரிசளிக்கப்படும்.
நூலாசிரியர்க்குப் பரிசுகள் வழங்கப்படாது.  பதிப்பகத்தார் ஒப்பமோ
இசைவோ இன்றி வரும் நூல்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால்
பதிப்பகத்திற்கான பரிசுகள் வழங்கப்படமாட்டாது.
8  இப் போட்டிக்காகப் பெறப்படும் நூல்களை அரசால் அமர்த்தப்பெறும்
நிலைக்குழு ஆய்ந்து பரிசுக்குரிய நூல்களைத் தேர்ந்தெடுக்கும்.
9  குறிப்பிட்டதொரு நூல் எந்த வகைப்பாட்டைச் சார்ந்தது என்று
படிவத்தில் குறிப்பிடப்படாத நேர்வில் விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது.
10  வாழும் ஆசிரியர்களின் நூல்களும், நூல்கள் வெளியிடப் பெற்றபோது
வாழ்ந்துகொண்டிருந்த ஆசிரியர்களின் நூல்களும் மட்டுமே
இத் திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.  நேர்வுக்கேற்ப,
நூலாசிரியர்களுக்கோ, அவர்களுடைய மரபுரிமையர்களுக்கோ
பரிசுகள் வழங்கப்பெறும்.
11 அரசால் ஏற்கப்பட்டுள்ள சீரமைக்கப்பெற்ற எழுத்துகளில்
அச்சிடப்பெற்ற நூல்கள் மட்டுமே போட்டிக்குக் கருதப்படும்.
12 தொகுப்பாக அமையும் குறு நாவல்கள் , சிறுகதை என்னும் தலைப்பில்
அடங்கும்.
13 போட்டிக்கு வரப்பெறும் நூல்கள் முன்னுரை முதலியன உட்பட இரட்டை கிரவுன் அளவில் 150 பக்கங்களுக்குக் குறையாமலும், டெம்மி அளவில்130பக்கங்களுக்குக் குறையாமலும் இருத்தல்  வேண்டும்.  மரபுக்
கவிதை, புதுக்கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகிய மூன்றுதலைப்புகளுக்கும் பக்க வரையறை இல்லை.  கவிதை, சிறுவர் இலக்கியம் உட்பட அனைத்து வகைப்பாடுகளின் கீழான நூல்களும் கிரவுன் அளவுக்குக் குறையக்கூடாது.
14 ஒவ்வொரு தலைப்பிலும் “”சிறந்த நூல்”” ஒவ்வொன்றிற்கும் முதற்பரிசாக ரூ.30,000/- வழங்கப்பெறும்.  இந்நூல்களின் பதிப்பகத்தினருக்குஒவ்வொரு நூலுக்கும் பரிசுத் தொகையாக ரூ.10,000/- வழங்கப்பெறும். நூலாசிரியர்களுக்கும் பதிப்பகத்தினருக்கும் சான்றிதழ்களும்வழங்கப்பெறும்.
15 ஒரு தலைப்பில் ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றால் அத்தலைப்பில் பரிசு வழங்க இயலாது.
16 ஒரு தலைப்பில் / வகைப்பாட்டில் இருமுறை பரிசு பெற்ற நூலாசிரியர்
அதே வகைப்பாட்டில் / தலைப்பில்  மூன்றாவது முறையாகப் பரிசு பெற
இயலாது.
17 மைய / மாநில அரசின் நிதியுதவி அல்லது பரிசு பெற்ற எந்நூலும்
இப்பரிசுப் போட்டிக்குக் கருதப்பட மாட்டாது.
18 பரிசு பெறும் நூல், நூலாசிரியர்களின் கூட்டு முயற்சியால்
ஆக்கப்பட்டதாயின் அந்நூலின் பரிசுத் தொகை அந்நூலாசிரியர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
19 அயல்நாட்டு நூலாசிரியரால் எழுதப்பெற்ற ஒரு நூல் பரிசுக்குரியதாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டால் தொடர்புடைய ஆசிரியருக்குப் பாராட்டுச்
சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்.
20 பாடநூலில் இடம் பெற்றுள்ள நூல்கள் பரிசுப் போட்டிக்குக்    கருதப்படமாட்டாது.
21 போட்டிக்காக வரப்பெற்ற நூல்களை எக்காரணத்தைக் கொண்டும்
திருப்பியனுப்ப இயலாது.
22 பரிசுக்குரிய நூல்கள் விவரம் அரசின் ஏற்புடன் அறிவிக்கப்பெறும்.
திருவள்ளுவர் திருநாள் விழாவில் பரிசுகள் வழங்கப்பெறும்.
23  232323 அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பிற சொற்பொழிவுகள்,
பல்கலைக்கழகப் பட்டங்களுக்கு அளிக்கப்பெற்ற ஆய்வேடுகள்,
கொள்ளப்படமாட்டாது.
24 பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவிலுள்ள வெளியூர்
நூலாசிரியர்களுக்கும் பதிப்பகத்தினருக்கும் அவர்கள் பரிசுத்
தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் பெறுவதற்காகச் சென்னை
வந்து திரும்புவதற்காக இருப்பூர்தியில் இரு வழி இரண்டாம் வகுப்பு
சாதாரணக் கட்டணம் அளிக்கப்பெறும். சென்னையில்
வசிப்பவர்களுக்குப் போக்குவரத்துப்படி அளிக்கப்படும்.
வெளிநாட்டினருக்குப் பயணப்படி எதுவும் வழங்கப்பெறமாட்டாது.
25 இத்திட்டம் தொடர்பான விதிகளைத் தேவைக்கேற்ப அவ்வப்போது
திருத்தவோ, மாற்றவோ, நீக்கவோ அரசுக்கு அதிகாரம் உண்டு.
26 இத்திட்டத்தைச் செயற்படுத்துவதில் எழக்கூடிய இடர்ப்பாடுகள் குறித்து
அரசால் மேற்கொள்ளப்படும் முடிவே இறுதியானதாகும். அம்முடிவினை
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோ பிற வகையிலோ எதிர்த்தல்
கூடாது.
27 இப் போட்டியில் கலந்துகொள்ள ஒவ்வொரு நூலுக்கும்
பதிவுக்கட்டணமாக ரூ.100/- செலுத்தப்படுதல்  வேண்டும்.
இத்தொகை தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை என்ற முகவரிக்கு வங்கி வரைவோலையாகவோ  அல்லது அலுவலக நாள்களில் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் நேரிலோ செலுத்தலாம்.
நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்கள் வந்து  சேருவதற்குரிய கடைசி நாள்   31.8.2013
விண்ணப்பங்கள்  வந்து சேருவதற்குரிய  முகவரி
தமிழ் வளர்ச்சி வளாகம்  (முதல் தளம்)
 எழும்பூர், சென்னை – 600 008
தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
 தொடர்பிற்கு

News

Read Previous

சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்றார் கமால் நாசர் !

Read Next

சேஷாலம் முதல் அப்துல்லாஹ் வரை

Leave a Reply

Your email address will not be published.