எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்

Vinkmag ad

அன்பைப் பெருக்கு அனைத்தும் செழித்திடும்             
வம்பு வளர்த்தால் வளமே அழிக்கும்
 
நம்பி இறங்கு நலமே கிடைத்திடும்
வெம்பி கிடந்தால் வளங்கள் உடையும்
 
நோக்கம் இருந்தால் நெருங்குமே சக்திதான்
ஊக்கம் குறைந்தால் உடையுமே யுக்திகள்
 
நல்ல மனத்தில் நலமே தங்கிடும்
பொல்லாப் பகையால் பிளவுகள் பொங்கிடும்
 
ஐயம் களைதல் அவசியத் தேவையாம்
பொய்யும் புறமும் பொசுக்கிடும் சேவையை
 
எதிர்மறை எண்ணம் இருந்தால் தடைதான்
புதிர்கள் பெருகினால் பூஜ்யம் விடையாம்
 
நன்றி மறப்பதால் நன்மை அழிந்திடும்
என்றும் துரோகம் இன்பம் ஒழித்திடும்
 
நட்பின் வளையம் நமக்கு வரம்
தப்பு வராமல் தடுக்கும் அரண்
 
 
யாப்பிலக்கணம்: குறள் வெண்செந்துறை
 
 
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
 
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
 
 
அலை பேசி: 00971-50-8351499

News

Read Previous

வெளிச்ச வாசல்

Read Next

ஆழிபேரலைக்கு அஞ்சாத அலையாத்தி காடுகள்…

Leave a Reply

Your email address will not be published.