பரமக்குடி அல்ஹஸனாத் பைத்துல்மால் நிர்வாகிகள் முதுவை ஹிதாயத் உடன் சந்திப்பு
பரமக்குடி அல்ஹஸனாத் பைத்துல்மால் நிர்வாகிகள்
முதுவை ஹிதாயத் உடன் சந்திப்பு*
பரமக்குடி அல் ஹஸனாத் பைத்துல்மால் நிர்வாகிகள் சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத் உடன் சந்திப்பு நிகழ்ச்சி பைத்துல்மால் அலுவலகத்தில் 01.01.2021 மாலை நடந்தது. தொடக்கமாக இறைவசனம் ஓதப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி ஹிதாயத்துல்லா தலைமை வகித்தார். அறக்கட்டளையின் டிரஸ்ஸரர் முகம்மது சபீக் முன்னிலை வகித்தார்.
பைத்துல்மாலின் தலைவர் சேக் அப்துல் காதர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பைத்துல்மாலின் செயலாளர் ரசூல்கான் பைத்துல்மால் தொடங்கப்பட்ட விபரம் மற்றும் அதன் பணிகள் குறித்து விவரித்தார்.
சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத் பைத்துல்மாலில் நிதி ஆதாரத்தை மேம்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பைத்துல்மால் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
பைத்துல்மாலின் பொருளாளர் அஸ்கர்அலி நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அஹமது தையூப், நுாருல் அமீன், முபின், தாஹிர்கனி, அலாவுதீன் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் பங்கேற்றனர்.