தேரிருவேலியில் நவாஸ் கனி எம்பிக்கு பாராட்டு நிகழ்ச்சி
தேரிருவேலியில் நவாஸ் கனி எம்பிக்கு பாராட்டு நிகழ்ச்சி
தேரிருவேலி :
தேரிருவேலி முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் 31.12.2020 வியாழக்கிழமை ஜாமிஆ மஸ்ஜித்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பிக்கு பாராட்டு விழா நடந்தது.
தேரிருவேலி முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் ஆசிரியர் முஹம்மது அலி தலைமை வகித்தார். முன்னதாக இறை வசனங்கள் ஓதப்பட்டது.
தேரிருவேலி ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலவி செய்யது சுல்தான் அலி பாதுஷா மன்பயீ ஃபாஜில் ரஷாதி வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஆப்பனூர் பீர் முஹம்மது, ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட செயலாளர் ஜலாலுதீன் அன்வாரி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.
இந்த விழாவில் ஜமாஅத் பிரமுகர்கள் சமுதாய தலைவர்கள் தோழமை கட்சி & அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல் உதவி :
தேரிருவேலி ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம் மௌலவி செய்யது சுல்தான் அலி பாதுஷா மன்பயீ ஃபாஜில் ரஷாதி