இணையத்தில் எழுத்துருக்கள்: முக்கிய உத்தரவு

Vinkmag ad

மதுரை: ‘அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்’ என, அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றில், 5 வகை எழுத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ் பாரதி, தமிழ் கபிலர், தமிழ் கம்பர், தமிழ் வள்ளுவர், தமிழ் காவேரி ஆகியவை இந்த எழுத்துருக்கள் ஆகும்.

இவ் எழுத்துருக்களை, http://tamilvu.orgல், ‘டவுன்லோடு’ செய்து பயன்படுத்தலாம். நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

News

Read Previous

ஊழியர்கள் பற்றாக்குறை பயனாளிகள் ஏமாற்றம்

Read Next

24 மணிநேர தொலைபேசி 104 மருத்துவ சேவை : முதல்வர் துவக்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *