செயற்கை கை: விண்ணப்பிக்க நாளை கடைசி
முழங்கைக்கு கீழ் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் செயற்கை கை பெற ஜனவரி 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முழங்கைக்கு கீழ் கை துண்டிக்கப்பட்டவர்களுக்கு அரசு பேட்டரியால் இயங்கும் நவீன செயற்கை கை வழங்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, கல்வி பயிலும், பணியாற்றும், சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் இதைப் பெற, தேசிய அடையாள அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் 7 ஆம் தேதிக்குள், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மதுரை-20 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். தொலைபேசி எண்- 0452-2529695. இத்தகவல், மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.