வங்கி முன் முதியோர் ஆர்ப்பாட்டம்
முதுகுளத்தூரில் உள்ள தனியார் வங்கி முன் முதியோர் உதவித் தொகையை வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆனைசேரி கிராமத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் ஆய்வாளர் கண்ணன், சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவாத்தை நடத்தியதையடுத்து வாபஸ் பெறப்பட்டது. இதுகுறித்து ஆனைசேரியைச் சேர்ந்த காந்தி என்பவர் கூறும் போது, எனக்கு கடந்த 4 மாதமாக முதியோர் உதவி தொகை வரவில்லை. வங்கியில் கேட்டால் சரியான பதில் இல்லை எனக் கூறினார். வங்கி மேலாளர் பாஸ்கரன் கூறும் போது, ஒரு சிலருக்கு மட்டும் தான் பணம் வரவாகாமல் உள்ளது. பணம் வந்த பின் வருமாறு அவர்களிடம் கூறினேன் என்றார்.