முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை தேர்தல் விதிமுறையை மீறியதாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முதுகுளத்தூர் காந்தி சிலை அருகே திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேலின் கட்சி அலுவலகம் உள்ளது. இதன் சுவரில் கட்சி சின்னம் வரைந்த கொடிகள் மற்றும் புகைப்படங்கள் அழிக்கமால் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேர்தல் பறக்கும் படை பதிவாளர் கண்ணதாசன் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags: எம்.எல்.ஏ. வழக்கு