முதுகுளத்தூரில் கஞ்சா விற்றவர் கைது
முதுகுளத்தூரில் கஞ்சா விற்றவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
முதுகுளத்தூர் தெற்கு தெருவைச்சேர்ந்த சரீப் முகமது மகன் காதர்மைதீன் (59). இவர் மேலச்சாக்குளம் விலக்குச் சாலையிலுள்ள நீர்த்தேக்க தொட்டியில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார்.
அவரை, 250 கிலோ கஞ்சா பொட்டலத்துடன் முதுகுளத்தூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.