மாநில குத்துச்சண்டை போட்டியில் முதுகுளத்தூர் மாணவர் மூன்றாமிடம்
மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நவ.30 முதல் டிச.3 வரை பள்ளி மாணர்களுக்கு மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவர் எம்.சோபன் குமார் 17 வயதிற்குள்பட்டோர், 80 கிலோ பிரிவில் மூன்றாமிடம் பெற்றார். மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற மாணவரையும், உடற்கல்வி ஆசிரியர்கள் க.கமால்பாட்ஷா, எம்.தமிமுன் அன்சாரி ஆகியோரையும் பள்ளி கல்விக் குழுத் தலைவர் ஏ.ஷாஜஹான், தாளாளர் எம்.எஸ்.சௌக்கத்அலி, தலைமை ஆசிரியர் ஓ.ஏ.முகம்மது சுலைமான், உதவித் தலைமை ஆசிரியர் சுல்த்தான் அலாவுதீன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பிரசாத் ஆகியோர் பாராட்டினர்.