அரசுக் கல்லூரியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு
முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டெங்கு ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியில் கழிப்பறை, குடி தண்ணீர் தொட்டிகள், கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியின் கட்டடங்களைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீர், புற்கள், கருவேலமரங்கள் போன்றவற்றை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சுத்தம் செய்தனர். இதனை கல்லூரி முதல்வர் கே.செல்லத்துரை,என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் உ.சண்முகநாதன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.