கொரோனா தாக்கம்
கொரோனா தாக்கம்
உஹானில் உருவாகி
உலகெமெங்கும் பரவி
உயிர்க் கொல்லிக் கிருமியாகி
உலகையே ஆட்டுவிக்கும்
கொரோனா என்னும்
கொடிய கிருமியிடமிருந்து
தப்பிக்க வழிதேடி
தவிக்கின்ற மானுடரே ,
விதியென்று எண்ணி
வேதனைப் படாமல்
மதிகொண்டு உடனடியாய்
மருத்துவமனை செல்வீர் .
துப்புதல் தவிர்த்திடுவீர்.
கைசுத்தம் பேணிடுவீர்
கைகுலுக்கல் தவிர்த்திடுவீர் ,
கரம்கூப்பி வணங்கிடுவீர் .
பொது இடங்களில் அதிகம்
கூடுதல் தவிர்த்திடுவீர் .
மதுக்கூடம் தவிர்த்திடுவீர் .-விலை
மாதுறவு தவிர்த்திடுவீர்.
வெளிநாட்டுப் பயணங்கள்
வேண்டாமே சிலகாலம் ,
வருமுன் காப்பதென்ற
வள்ளுவரின் சொல்லை
வாழ்வில் கடைபிடிப்பீர்
வாழ்வாங்கு வாழ்ந்திடுவீர்.
சுத்தம் சோறுபோடும் என்ற
பழமொழியை நினைவில் வைப்பீர்
நித்தம் கடைபிடித்து
நெடுங்காலம் வாழ்ந்திடுவீர்.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணி யம்
17.03.2020