நான் அமைதியாக வாழ விரும்புகிறேன்,அரசியலில் தொடர விரும்பவில்லை: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பேட்டி
நான் அமைதியாக வாழ விரும்புகிறேன்,அரசியலில் தொடர விரும்பவில்லை: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பேட்டி
பெங்களூரு : அரசியலில் இருந்து விலக நினைப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். அரசியலில் இருந்து விலகி இருக்க நினைக்கிறேன். நான் எதிர்பாராத விதமாக விபத்து போன்று அரசியலுக்கு வந்தேன். தற்செயலாக முதல்வர் ஆனேன். இருமுறை முதல்வராகும் வாய்ப்பை கடவுள் எனக்கு கொடுத்தார். நான் யாரையும் திருப்திபடுத்த விரும்பவில்லை. 14 மாத ஆட்சி காலத்தில் மாநில வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றினேன். அதில் எனக்கு திருப்தி என்று அவர் கூறினார்.