வேதம் வெல்லும்!
கற்பவரின் ஞானமதில் சூழ்ந்து- அறிவுக் கண்களிலும் தேடல்கள் சார்ந்து- ஒளிக் கற்றைகளின் மின்னுதலைப் பெற்றுதரும் கல்வியது வேதம்- இறை- போதம்! அற்புதங்கள் கண்டுகொண்டு நாளும்- ஓத அகமெங்கும் நிம்மதியே மீளும் – இதை அண்ணலவர் சொல்லியதன் உண்மையென அச்சமின்றிச் சொல்லு- பூமி- வெல்லு! -அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி