பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
இசையின் நாதம் இறையடி எய்திய இடிநிகர் செய்தி இன்றெமை எட்டிற்று! திசையெங்கும் வாழும் தமிழரின் இதயத்தில் முடிவிலாத் துயரின் தீயினை மூட்டிற்று! அசைவிலா துறங்குதோ ஆயிரமாயிரம் ஆனந்தமூட்டும் பாடல்கள் பாடிய இசைநிலா இன்று! இனியெழ மாட்டாதோ? இதயம் நிறைந்த துன்ப அலைகளோடு… புலவர் சிவநாதன் இலண்டன் தமிழவை