மழையின் தாண்டவம் !
மழையின் தாண்டவம் ! கவிஞர். மஸ்கட் மு. பஷீர் நான் மழையைப் பார்த்து ஆவேசமாய்க் கேட்டேன் ஏன் இப்படிப் பொழிந்து எங்களை சின்னாபின்ன மாக்கிவிட்டாய் என்று ! தாகத்துக்குத் தண்ணீர் கேட்டோம் தரணி செழிக்க தாவரம் செழுமை கொழிக்க வயலும் வளமும் வண்ணமிகு சோலையும் அணையும் ஆறும் அளாவாய் நிரம்பி குடிநீரும் குளிக்க தண்ணீரும் பெற்று குடியாய் வாழத்தானே மழையே உன்னைக் கேட்டோம் ! நீயோ மானாவாரியாய் பெய்தாய்… ஏரிகள் உடைபட ஆறுகள் அறுபட சேரிகள் மிதந்திட மாடிகளும் மூழ்கிட பாதையே தெரியாத பரிதாபம் திரும்பிய இடமெல்லாம் தீவுகளாய்…