அருவி
அருவி அருவி.. என்னும் வார்த்தைகேட்டால் அடிநெஞ்சும் குதிக்கிறதே! தலையில்விழும் தண்ணீரால் குருதியெல்லாம் குளிர்கிறதே!! மலைமகளின் கூந்தலிங்கே வெண்மையென விரிகிறதே! அலைதவழ ஓடிவரும் ஆசையங்கே தெரிகிறதே! குளிர்த்தென்றல் காற்றுவந்து கூடலின்பம் காட்டிடுதே! மழைச்சாரல் போலவொரு மகிழ்ச்சிவிழா நடக்கிறதே! குற்றால அருவிமுதல் குளிரூட்டும் அருவிகள் மழைக்காலம் தருகின்ற சீர்தானே…