அருவி
அருவி
அருவி.. என்னும் வார்த்தைகேட்டால்
அடிநெஞ்சும் குதிக்கிறதே!
தலையில்விழும் தண்ணீரால்
குருதியெல்லாம் குளிர்கிறதே!!
மலைமகளின் கூந்தலிங்கே
வெண்மையென விரிகிறதே!
அலைதவழ ஓடிவரும்
ஆசையங்கே தெரிகிறதே!
குளிர்த்தென்றல் காற்றுவந்து
கூடலின்பம் காட்டிடுதே!
மழைச்சாரல் போலவொரு
மகிழ்ச்சிவிழா நடக்கிறதே!
குற்றால அருவிமுதல் குளிரூட்டும் அருவிகள்
மழைக்காலம் தருகின்ற சீர்தானே நமக்கெல்லாம்!
கொண்டாட்டம் கொள்ளையின்பம் இவையெல்லாம்
உண்டாகும் இடம்தானே அருவியென்போம்!
அழகியவள் மண்மீது விழும்போதும்
ஒருபோதும் மாராப்பை விலக்கவில்லை!
தன்னிடம் உள்ளதையெல்லாம் தருவதைச்
சொல்லித்தரும் அருவியிடம் பாடம்கேட்போம்!
காவிரிமைந்தன்
Tags: அருவி