பரமக்குடி இளம் உள்ளங்கள் அமைப்பின் சார்பில் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது
பரமக்குடி இளம் உள்ளங்கள் அமைப்பின் சார்பில் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது
பரமக்குடி :
பரமக்குடி இளம் உள்ளங்கள் அமைப்பின் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் இளம் சாதனையாளர்களுக்கு ‘சாதனையாளர்கள் விருது’ 01.01.2022 சனிக்கிழமை காலை மீனாட்சி திருக்கோயில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு மேனேஜிங் டிரஸ்டி எஸ். பாலசுப்பிரமணியன்தலைமை வகித்தார்.
தெட்சிணாமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஓவியத்துறையில் கிருஷ்ண பிரசாத், கார்களின் வகைகளை துல்லியமாக சொல்லி வரும் த.சந்தோஷ் கண்ணா, பேச்சில் சிறந்து விளங்கும் எஸ். அபர்ணா, நாட்டியத்தில் சிறந்து வரும் என். ஹன்சிகா, என்.எஸ். சூர்யபிரபா உள்ளிட்டோர் ‘சாதனையாளர் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இளம் உள்ளங்கள் அமைப்பின் நிர்வாகிகள், மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.