வாலிநோக்கத்தில் முப்பெரும் விழா
வாலிநோக்கத்தில் முப்பெரும் விழா
வாலிநோக்கம் :
வாலிநோக்கம் மஜ்லிஸுல் உலமா சபை, ஆஷிக் ரஸூல் மீலாது கமிட்டி மற்றும் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் ஆகியவற்றின் சார்பில் மீலாது விழா, வலிமார்கள் நினைவு விழா, ஆலிம்கள் கவுரவிப்பு விழா ஆகியவை 02 ஜனவரி 2022 ஞாயிற்றுக்கிழமை மாலை வெகு சிறப்புடன் நடந்தது.
இந்த விழாவுக்கு வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி செய்யது ஃபாரூக் அரூஸி, மஜ்லிஸூல் உலமா சபை தலைவர் மவ்லவி மஹ்மூத் ஆலிம் மன்பஈ, வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவர் அப்துல் முத்தலிபு ஆகியோர் தலைமை வகித்தனர். மவ்லவி பி. முஹம்மது ரபீக் ஆலிம் பிலாலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
வாலிநோக்கம் அல் அமீன் மெட்ரிக் பள்ளிக்கூடத்தின் நிறுவனர் அப்ளலுல் உலமா ஏ. உவைசுல் கர்ணை ஆலிம், கடலாடி வட்டார ஜமாஅத் உலமா சபை செயலாளர் மவ்லவி எஸ். சிக்கந்தர் காஸிமி, மஸ்ஜித் ரஹ்மான் மவ்லவி ஜாஹிர் உசேன் மஹ்ஸனி உள்ளிட்டோர் தொடக்கவுரை நிகழ்த்தினர்.
துபாய் தொழிலதிபர் கீழக்கரை முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப், அத்திக்கடை வாஹித் ஃபாத்திமா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவீ அல்ஹாஜ் ஏ. ஃபவ்ஜ் அப்துற்றஹீம் பாகவி, சாயல்குடி மஸ்ஜித் அக்ஸா பள்ளி வாசல் இமாம் ஷஹீத் இபுறாஹிம் அரூஸி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
கீழக்கரை லக்கி சலீம், காசிம், ஊடகவியாளர் முதுவை ஹிதாயத், பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே.ஏ. ஹிதாயத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி ஜூம்ஆ பள்ளிவாசல் இமாம் மவ்லவி ஏ. ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி தொகுப்புரை நிகழ்த்தினார். விழாவில் சுற்று வட்டார இமாம்கள் ஜமாஅத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.