அன்னையர் தினம்
அன்னையர் தினம்
அன்னையைப் போற்றுதும்
அன்னையைப் போற்றுதும்
தன்னுயிர் பணயம் வைத்து
தன்னுளே நமை சுமந்து,
தன் சுகம்தனை மறந்து
நன் மகவாய் ஈன்றெடுத்த
அன்னையைப் போற்றுதும்
தன்மடியிலே கிடத்தி,
தன்னுதிரப் பாலூட்டி
கண்ணே என சீராட்டி
கண்ணிமை போல் காத்து
கருத்தாய் நமை வளர்த்து
ஒவ்வொரு அசைவினையும் உவகையுடன் கவனித்து
ஒவ்வொரு வெற்றியிலும்
உள்ளம் பூரித்து நிற்கும்
அன்னையைப் போற்றுதும்.
தன்னுடைய பிரதிநிதியாய்
தன் கடமைதனையாற்ற எண்ணி இறைவனன்றோ
அன்னையைப் படைத்துவிட்டான்.
வாழும் தெய்வமான
அன்னையின் பாதத்தை நாளும் வணங்கிடுவோம்.
நல்லாசி பெற்றிடுவோம்.
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம். 9.5.2021