காற்றே விடை கூறு
கருதரிக்க வைத்தத்
தருக்களை எல்லாம்
உருதெரியாமல் அழித்ததேன்
பெருங்காற்றுப் புயலே!
கர்த்தனிட்ட ஆணைக்குக்
கட்டுப்பட்டு வந்தாயோ?
“வர்த”ப் பெயர் கொண்டு
வதம் செய்ய வந்தாயோ?
மரந்தான் வளர்த்தோம்
மழைதரும் என்றே
மரங்களை அழித்து
மழையின்றித் தவிக்கவா?
ஆலைகளின் புகைதான்
ஆபத்துகளாகி உன்னைச்
சாலை மரங்களைச்
சாய்க்க வைத்ததோ?
_ அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி
Tags: காற்று