இனித்தொடங்கப் போகிறது !
இனித்தொடங்கப் போகிறது !( எம். ஜெயராமசர்மா.. மெல்பேண் .. அவுஸ்திரேலியா )கருங்கூந்தல் நிறைந்திருக்க
கன்னமதில் குழிகள்விழ
விளியிரண்டும் மீனெனவே
வெண்மைநிற முகத்தினிலேமருண்டோடி பார்த்திருக்கவட்டநிலா வருவதுபோல்
இடைஇருந்தும் தெரியாமல்
அவள்வருவாள் நடைபயின்றுஅதைக்காண ஆவலுடன்அனுதினமும் காத்திருப்பேன் !பலபேர்கள் வந்தாலும்பார்த்துவிடா என்பார்வைஇவள்மட்டும் வந்தவுடன்எனைமீறிச் சென்றுவிடும்நினைவெல்லாம் அவளாகநிறைந்திருக்கும் காரணத்தால்அவள்வருகை மட்டுமெந்தன்அகத்தினுள்ளே புகுந்துவிடும் !சிலவேளை அவள்பார்ப்பாள்பலவேளை நான்பார்ப்பேன்மின்சாரம் பாய்வதுபோல்வேகமுள்ளே பரவிநிற்கும்என்பார்வை அவள்பார்வைஇரண்டுமொன்றாய் இணைந்திடவேகண்களிலே பேசியவர்கள்கைபிடிக்க எண்ணிவிட்டோம் !இல்லறத்தில் நாமிணைந்தோம்இன்பவுலா சென்றுவந்தோம்அன்புநிறை காதலொடுஅகமகிழ நாமிருந்தோம்ஈருடலாய் இருந்தாலும்ஓருயிரே என்றிருந்தோம்எங்களது காதலதுஇணையின்றி வளர்ந்ததுவே !பிள்ளைகள் பிறந்தார்கள்பேரின்பம் தந்தார்கள்உள்ளூர நாம்மகிழ்ந்தோம்உவகையுடன் கொஞ்சிநின்றோம்கைநிறைய பொருள்வந்துகண்ணியமாய் நாம்வாழ்ந்தோம்கடவுளது கிருபையினால்காதல்மேலும் வளர்ந்ததுவே !வளர்ந்துவிட்ட பிள்ளைகளும்இணைந்துவிட்டார் இல்லறத்தில்முதுமை வந்துவிட்டதனால்முடங்கிவிட்டோம் இருவருமேதனிமையெனும் நிலையெம்மைதவிக்கவைத்து நிற்கிறதுஇனிமைதனை நினைத்தேங்கிஇருக்கின்றோம் இருவருமே !கட்டழகுக் கருங்கூந்தல்காந்தநிறை கண்மணிகள்மொட்டவிழ்த்த புன்சிரிப்புமுழுநிலவு பொலிவுமுகம்அத்தனையும் அவழிழந்துஅயர்ந்திப்போ இருக்கின்றாள்அவள்கோலம் தனைநினத்துஅலமந்து நானிருக்கேன் !நான்ழுதால் தானழுவாள்நான்சிரித்தால் தான்சிரிப்பாள்தேனாகாப் பேசியவள்திக்திக்கிப் பேசுகிறாள்மான்விழிகள் கொண்டஅவள்மயக்கமுடன் விழிக்கின்றாள்மயக்கம்தந்த மங்கையிப்போதயக்கமுடன் தவிக்கின்றாள் !என்றாலும் அவளிடத்தில்என்சுகமே தெரிகிறதுதன்தோழில் எனயணைத்துதான்வருடி நிற்கின்றாள்நான்வீழ்ந்து போகாமல்தான்வேராய் தாங்குகிறாள்என்னுயிரைத் தன்னுயிராய்எண்ணுகின்ற என்தலைவி !கூன்விழுந்து விட்டாலும்நான்விழுந்து போகாமல்தானெழுந்து எனைத்தாங்கிதாயெனவே நிற்கின்றாள்என்காதல் வாழ்வினிலேஇப்போதே இனிக்கிறதுஎன்வாழ்வில் இன்பவுலாஇனித்தொடங்கப் போகிறது !
Tags: இனி