முதுகுளத்தூரில் குடியரசு தின விழா
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் சரவணப் பொய்கை ஊரணியில் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். இளவரசி தேசியக் கொடியினை ஏற்றினார்.
இளஞ்செம்பூர்: அரசு உயர்நிலைப்பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவர் மயிலேறிவேலனும், சிக்கல் இந்தியன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் தாளாளர் முகமது ரபீக்கும் தேசியக் கொடியினை ஏற்றினர். எம். தூரி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் காளிமுத்தும், காத்தாகுளம் தொடக்கப் பள்ளியில் ஊராட்சித் தலைவர் ராமனும் தேசியக் கொடி ஏற்றினர்.
கீரனூர்: இங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் ஊராட்சித் தலைவர் புவனேஸ்வரன் தேசியக் கொடி ஏற்றினார். முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் சுதந்திரா காந்தி இருளாண்டியும், பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் எஸ். சௌக்கத்அலியும் கொடி ஏற்றினர். டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பிரிட்டோ செல்வக்குமாரி கொடி ஏற்றி வைத்தார். ஸ்ரீ கண்ணா மெட்ரிக். பள்ளியில் நிறுவனர் கே. காந்திராஜன் தேசியக் கொடி ஏற்றினார்.