ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
முதுகுளத்தூரில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 6 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றதாக முதுகுளத்தூர் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை எதிரில் குடியிருக்கும் குருசாமி மனைவி கிருஷ்ண ராகினி (64). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவர் சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்தாராம். அப்போது மர்ம நபர், கிருஷ்ண ராகினியிடம் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றதாக கணவர் குருசாமியிடம் கூறியதாக முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததின் பேரில் டி.எஸ்.பி. நடராஜன் உத்தரவின் பேரில் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் மூக்கன் மற்றும் தலைமைக் காவலர் ராதாகிருஷ்ணன் கொண்ட தனிப்பிரிவு போலீஸார் அந்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.