துபாயில் நடந்த மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

Vinkmag ad
ma1துபாயில் நடந்த மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் :
துபாய் டிவைன் பிளாக் மஜ்லிஸ் சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
காணொலி வழியாக நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு முஹிப்புல்  உலமா அல்ஹாஜ் முஹம்மது மஃரூப் தலைமை வகித்தார்
அவர் தனது உரையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதன் நோக்கம் குறித்து விவரித்தார்.
மார்க்க அறிஞர்கள் குறித்த தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக சமூக ஆர்வலர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை
அரபி மொழியில் ஓதினார். பின்னர் அதன் தமிழாக்கம் குறித்து விவரித்தார்.
முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் ‘வாராய்!வாராய்!வாராய்!வாராய்!
உனைத்தானே நாளும் வேண்டினேன் ஓ…’ என்ற பாடலை  முஹம்மது இம்தாதுல்லா
வீடியோ முறையில் வடிவமைத்தார். அந்த பாடலை மனிதநேய விருதாளர்
கல்லிடைக்குறிச்சி ஆ. முகமது முகைதீன் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
  அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர்
மௌலவி அல்ஹாஜ் அல்ஹாபிழ் S.M.B. ஹுஸைன் மக்கி ஆலிம் மஹ்ழரி
‘நலம் பெறச் செய் இறைவா’ என்ற தலைப்பில் மிகவும் உருக்கமான வகையில்
தனது உரையை நிகழ்த்தினார்.
ஜலால் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை
முதுவை ஹிதாயத் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
நிகழ்வில் சதக் அன்சாரி காக்கா, காதர் சாஹிப், அடமங்குடி அப்துல் ரஹ்மான்,
அபுபக்கர், உபூர் காக்கா உள்ளிட்ட பலர் பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

News

Read Previous

காணொளிகளை தயாரிக்க

Read Next

தமிழ்ப்புத்தகம் வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published.