கீழை ஜமீல் வஃபாத்து
துபாய் ஈமான் அமைப்பு இரங்கல்
துபாயில் வர்த்தகம் செய்து வந்த வந்த கீழை ஜமீல் என்ற ஜமீல் முகம்மது அவர்கள் உடல்நல குறைவால் துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று 26.04.2020 (2.00 A.M) மணி அளவில் வஃபாத்தானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
துபாய் ஈடிஏ அஸ்கான் குழுமத்தின் டிரேடிங் அண்ட் ஷிப்பிங் பிரிவில் பணியாற்றியவர்.
பத்திரிகைத் துறையில் எழுந்த ஆர்வத்தின் காரணமாக கீழை அஞ்சல் என்ற பத்திரிகையை நடத்தியவர்.
பல்வேறு சமூக அமைப்புகளில் பொறுப்புகளை வகித்தவர். சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கு தேவையான உதவிகள் சென்றடைய வேண்டும் நோக்கத்தில் சிறப்பான சேவைகளை செய்து வந்தவர்.
அமீரகத்தில் அனைத்து தரப்பு மக்களின் அன்ப்பை பெற்றவர்.
இத்தகைய சிறப்பு மிக்க சமூக சேவகரின் மறைவு பேரிழப்பாகும்.
அன்னாரது ஜனாஸா இன்று துபாயில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மறுமைப் பேருக்காக அனைவரும் துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கீழை ஜமீல் மறைவுக்கு ஈமான் அமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.