8 பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்

Vinkmag ad

முதுகுளத்தூர் தொகுதியில், 8 பள்ளிகளில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்தது: முதுகுளத்தூர் தொகுதிக்குள்பட்ட, பேரையூர், அலங்கானூர், கடலாடி, சிக்கல், சாயல்குடி(பெண்கள் பள்ளி), கீழத்தூவல், மேலக்கிடாரம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும், திருவரங்கம் புனித இருதய மேல்நிலைப்பள்ளிக்கும், ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை சுத்திகரித்து, குடிநீராகப் பயன்படுத்தும் வகையில் தலா ரூ.2.5 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கருவிகள் பொருத்தும் பணிகள் விரைவில் முடிந்து மாணவ, மாணவிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

News

Read Previous

மகளிர் சுய உதவிக்குழு விளையாட்டுப் போட்டி

Read Next

மனத்தினால் வரவேற்போமே !

Leave a Reply

Your email address will not be published.