வீட்டு பூட்டை உடைத்து 22 பவுன் திருட்டு

Vinkmag ad

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலக்கொண்டுலாவியைச் சேர்ந்த குருசாமி மகன் செல்லப்பாண்டி (50). விவசாயி. இவர் தனது வீட்டைப் பூட்டி விட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டாராம்.

அந்த சமயத்தில் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 22 பவுன் நகை திருடப்பட்டதாம். இது குறித்து செல்லப்பாண்டி பேரையூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. செல்லமணியிடம் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மூக்கன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்றது. இதையடுத்து ஏனாதி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் மகாலிங்கம் (18) என்பவர் நகையை திருடியது தெரிய வந்ததாம்.

இதனால் மகாலிங்கத்தின் வீட்டை போலீஸார் சோதனை செய்தனராம். அப்போது வீட்டில் இருந்த 11 பவுன் நகையை போலீஸார் கைப்பற்றினராம். மகாலிங்கத்தை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

News

Read Previous

பிள்ளைகளிடம் நேரம் செலவிடுங்கள்: வலியுறுத்தும் குறும்படம்

Read Next

நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *