வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
முதுகுளத்தூர் அருகே ஆதனக்குறிச்சியில் வியாழக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 7 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதனக்குறிச்சியைச் சேர்ந்தவர் பால்பாண்டி மனைவி சண்முகவள்ளி (58).
இவர் வீட்டைப் பூட்டிவிட்டு வயலுக்கு சென்று விட்டார். மதியம் வந்து வீட்டை பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 7 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஆய்வாளர் மூக்கன்,சார்பு ஆய்வாளர் ஜான்சிராணி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.