விஷம் குடித்து முதியவர் சாவு
முதுகுளத்தூர் அருகே பொதிகுளத்தில் செவ்வாய்க்கிழமை முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முதுகுளத்தூர் அருகே பொதிகுளத்தை சேர்ந்த மலைமேகு(55). இவர் குடும்பப் பிரச்னையின் காரணமாக விஷம் குடித்து விட்டு வயல் காட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து மலைமேகு மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.