விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்
முதுகுளத்தூர், கடலாடி, கமுதி வட்டார விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து, ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை திட்ட மேலாளர் ஸ்ரீகிருபா தலைமை வகித்தார்.விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு பற்றிய ஆலோசனைகளை கால்நடை மருத்துவர் பி.சந்தானம் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள அலுவலர் துரைமுருகன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.