வாழ்த்துகிறேன்
வாழ்த்துகிறேன்
—————-
அன்பை
அனைவருக்கும்
அளவில்லாமல் வழங்கி
அனைவரின் அன்பையும்
பெற்றிருப்பவர்
திரு எஸ்எஸ் அவர்கள்…
பண்பையும்
பாசத்தையும்
ஒருங்கே பெற்று
பார்ப்பவர் மனதில்
பசையாக ஒட்டிக்கொள்பவர்
திரு எஸ்எஸ் அவர்கள்…
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசா
ஒப்பற்ற நல் மனிதர்
திரு எஸ்எஸ் அவர்கள்…
வார்த்தைகளில்
வனஸ்பதி தடவி வரும்
வசீகர குரலோன்
திரு எஸ்எஸ் அவர்கள்…
எண்பதுகளின் இறுதியில்
பூக்குளமும் கால்வாயும்
சிறுபோது சிற்றோடையும்
ஒன்றாக சங்கமித்தது
முதுவை ஏரியில்…
ஒரு கூட்டு பறவைகளாய்
ஒரே விடுதியில் தங்கி
அவருடன் படித்த காலம் முதல்
அவரை அறிவேன்…
எல்லோரும்
இரண்டு அடி வைக்கும் போது
நான்கு அடி வைக்கும் அளவு
நன்றாக வளர்ந்திருந்தார்
உயரத்தில் மட்டுமல்ல
உள்ளத்திலும் தான்…
பகைவருக்கும்
அருளும் நல் நெஞ்சுடன்
பள்ளி பருவத்திலேயே
பக்குவப்பட்டிருந்தார் …
முதல் விடுதி அனுபவத்தில்
முயற்சிக்க முடியாமல்
வீடு திரும்பி
காடு வேலை செய்ய
எத்தணித்த
எத்தனையோ மாணவர்களின்
எண்ண ஓட்டத்தை
தவறென புரியவைத்து
விடுதியில் தங்கவைத்த
தாயுமானவர்
திரு எஸ்எஸ் அவர்கள்..
ஏட்டுச்சுரைக்காய்
கறிக்கு உதவாதென்று
ஏடுகளில் படித்த பழமொழிக்கு
திரு எஸ்எஸ் அவர்கள்
எளிதான உதாரணம்…
நடந்து செல்லும்
நங்கையை போல
கடந்து செல்லும்
காற்று தன்னுடன்
ஈரப்பதத்தையும்
எடுத்துச்செல்வதுபோல
மொத்த குடும்பத்துடன்
மெத்த பயணிக்கும்
கூட்டுக்குடும்பத்தின்
பாட்டுடைத்தலைவன்
திரு எஸ்எஸ் அவர்கள்….
மணமாகி
மறுவீடு சென்றாலும்
மனதிற்கினிமை
பிறந்த வீடே …
அதுபோல
திரு எஸ்எஸ் அவர்கள்
கடல் கடந்து
வணிகம் செய்தாலும்
முதுவை மண் அவரது
இளமைக் கால ஏணி…
தன்னை வளர்த்த முதுவை
மண்ணுக்கும்
மக்களுக்குமான
மகத்தான சேவையாக…
எளியவர்களுக்கும்
எல்லாபொருட்களும்
எளிய விலையில்
என துவங்கப்படும்
எஸ்எஸ் சூப்பர் மார்க்கெட்…
என்றும் முதுவை மக்களின்
வாழ்வில் இணைந்து
சிறக்க வாழ்த்துகிறேன்…
பா.திருநாகலிங்க பாண்டியன்
கீழச்சிறுபோது