முளைப்பாரி ஊர்வலம்
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் செல்வியம்மன் கோயிலில், புரட்டாசி பொங்கலை முன்னிட்டு, செல்வநாயகபுரத்தில் முளைப்பாரி திருவிழா நடந்தது. ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமையிலும், கிராம தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் ஜெகன்நாதன், பொருளாளர் நவநீதன் முன்னிலையிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து சென்று, சங்கராண்டி ஊரணியில் கரைத்தனர்.
Tags: ஊர்வலம் முளைப்பாரி