முன்விரோத தகராறு: கத்தியால் குத்திய 4 பேர் மீது வழக்கு

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே ஒருவானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் கோவிந்தன். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சத்தியகாந்தி (29) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு சீட்டு விளையாடும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முன்விரோதம் காரணமாக சத்தியகாந்தி மற்றும் இவரது உறவினர்களான சாத்தங்குடியைச் சேர்ந்த பூவலிங்கம், அண்ணாமலை மற்றும் ஒருவர் என 4 பேரும் சேர்ந்து, சனிக்கிழமை கோவிந்தனை கத்தியால் குத்தியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த கோவிந்தன், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து, இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் கோவிந்தன் அளித்த புகாரின்பேரில், 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News

Read Previous

பூமியைப் போலவே உள்ள மூன்று கிரகங்கள்

Read Next

தூக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *